பாப்பரசரைக் கொல்ல திட்டமிட்ட சிறுவன்!!

275

o-POPE-FRANCIS-facebookபாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் 22–ம் திகதி முதல் 27–ம் திகதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்தவுள்ளார்.

மேலும் வாஷிங்டன், நியூயோர்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் பாப்பரசரைக் கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்த சிறுவன் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் பாப்பரசரைக் கொல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்தவித ஆயுதங்களை பயன்படுத்துவது, எப்படி கொல்வது போன்ற விவரங்கள் அனைத்தையும் இணையதளம் மூலம் குறித்த சிறுவன் பெற்றுள்ளார்.

அமெரிக்க புலனாய்வு துறையினர் இணையதள நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது இந்த சிறுவனின் செயல் தெரியவந்தது. அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவன் பற்றிய எந்த விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.