திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்க கூடாது என்று இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் அசோக்கெனி என்பவர் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
திப்பு சுல்தான் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருகிறார். இது தொடர்பில் இந்து முன்னணி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது,
திப்புசுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும்.
தமிழர்களை துரத்தியடித்த திப்புசுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப் படுத்தினார்கள். எனவே எமது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.





