போட்டியின் போது வீரர் மரணம் – குத்துச் சண்டைக்கு தடைவிதிக்க கோரிக்கை!!

423

641165259Untitled-1

போட்டியின் போது காயமடைந்த அவுஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர் டேவி பிரவுன் ஜூனியர் (28) மருத்துமனையில் நேற்று உயிரிழந்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் ஐபிஎஃப் சூப்பர் ஃபெதர் வெய்ட் பிராந்திய போட்டி நடைபெற்றது. இதில், அந்த நாட்டின் டேவி பிரவுன் ஜூனியர், பிலிப்பைன்ஸின் கார்லோ மகலி ஆகியோர் மோதினர்.

போட்டியின் 12-வது மற்றும் இறுதிச் சுற்றின் 30-வது நொடியில் கார்லோவால் தாக்கப்பட்ட பிரவுன் நாக்அவுட் ஆகி தோல்வியுற்றார்.

கார்லோவின் குத்து பிரவுனின் தலையில் இறங்கியது. பிரவுன் நினைவிழந்து விழுந்தார். சுதாரித்து நினைவு திரும்பி எழுந்தார். ஆனால், சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மூளைக் காயம் காரணமாக அவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனை, அவுஸ்திரேலிய காவல்துறை மற்றும் அவுஸ்திரேலிய குத்துச் சண்டை சம்மேளன தலைவர் ஜான் மெக்டோகல் உறுதி செய்துள்ளனர்.

டேவி பிரவுன் ஜுனியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இவ்விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்து சங்கம் (ஏஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது.

ஏஎம்ஏ துணைத் தலைவர் ஸ்டீபன் பர்னிஸ் இது தொடர்பாகக் கூறும்போது, “ஒரு குத்து போதும் உயிரைப்பறிக்க. இளம் உயிர்கள் துயரமான முறையில் பலியாகின்றன. குத்துச் சண்டைக்குத் தடை விதிக்க இது சரியான நேரம். யாரேனும் ஒருவர் இரத்தம் சிந்துவதை தவிர்க்க முடியாது அல்லது மீள முடியாத மூளைக் காயம் காயம் அடைவதைத் தவிர்க்க முடியாது என்ற வகையில்தான் இன்றைய சூழலில் குத்துச் சண்டை போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது மூளைக்காயம் அடைகின்றனர். எனவேதான் குத்துச் சண்டைக்கு தடை விதிக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்” என்றார்.