தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான (எஸ்.ஏ.எப்.எப்.) கால்பந்து தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான எஸ்.ஏ.எப்.எப். தொடர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 3-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இப்போட்டிகளுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, இத்தொடரின் முதல் ஆட்டத்தில் நேபாளம்–-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. அதன்பின்னர், ஏ பிரிவில் உள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இப்போட்டி 23ஆம் திகதி நடக்கிறது.
நடப்பு சம்பியனான ஆப்கானிஸ்தான் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த அணி கடந்த முறை இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.