சிறுமி சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது!!

514

Seya-murder-case-two-arrested

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்­பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயதுடைய இளைஞனும் மற்றுமொரு நபருமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் சிறுமியின் உறவினர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஐந்து வயதுடைய சேயா செதவ்மி, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது காணாமல் போய் 13 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.