
க.பொ .த உயர்தர 2015 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்குரிய நாடக அரங்கியல் செயன்முறைப் பரிட்சைக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்புக்கள் யாழ்.கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
தகைமைபெற்ற வளவாளர்களினால் நடாத்தப்படும் இப் பயிற்சிநெறியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் 0774403955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுக்கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளும்படி அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்ட மாணவர்களும் பங்குகொள்ள முடியும்.





