21.09.2015 இன்றய தினம் உலக சமாதான தினத்தை முன்னிட்டு வவுனியா கோவில் குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் ஆலய பரிபாலன சபையுடன் இணைந்து உலக சமாதான தினம் அனுஸ்டிக்கபட்டது.
மேற்படி நிகழ்வில் விஷேட பூஜை வழிபாடுகளும்,தீபம் ஏற்றும் நிகழ்வுமும் இடம்பெற்றதோடு உலக சமாதானம் வேண்டி அந்தணர்கள் மற்றும் அரசியல் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர் .
படங்கள் :சர்மா