5 பெண்களை துஸ்பிரயோகம் செய்த முதியவர் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோகம்!!

485

Abuse

ஞாயிறு சமய வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த 63 வயதுடைய நபர் ஒருவர் பெலவத்த பகுதியில் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரால் மினுவாங்கொடை பகுதியில் இதற்கு முன்னர் ஐந்து பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த நபர் மினுவாங்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.