வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளம் பகுதியில் குளத்தை அண்மித்த பகுதியில் வீதி அமைப்பதை நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள் இன்று (22.09.2015) தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பதற்றம் நிலவியது.
வீதி அமைக்கப்படும் பகுதி நீர்ப்பாசணத் திணைக்களத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்தே அதிகாரிகள் வீதி அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் எனினும் அவ் வீதி அமைக்கப்படுவது தமக்கு அத்தியாவசியமானது எனவும் தெரிவிக்கும் பிரதேசவாசிகள், தொடர்ந்து வீதி அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.






