கழுதை மீது வந்த நபர் தற்கொலை தாக்குதல் – கழுதையுடன் நால்வர் பலி!!

392

donkey

கிழக்கு ஆப்கானிஸ்தான் வர்டான் மாகாணத்தில் கழுதை மீது ஏறிவந்த ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மூன்று நேட்டோ படை வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் உள்ள வர்டான் மாகாணத்தில் நேட்டோ படை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, சாலையோரம் கழுதை மீது ஏறி அமர்ந்து வந்த தலிபான் தீவிரவாதி திடீரென்று கழுதையை அதட்டி விரட்டி வேகமாக ஓட வைத்து நேட்டோ வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று நேட்டோ வீரர்கள் பலியாகினர். மேலும் கழுதையும் அதன்மீது அமர்ந்து வந்த மனித குண்டு தீவிரவாதியும் இச்சம்பவத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த முக்கிய பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.