கல்லூரியில் நான் பெரிய ரவுடி – சமந்தா!!

324

Samantha

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. “நான் ஈ” படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.

சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார். அவர் கூறியதாவது…

கல்லூரியில் படித்த போது நான் அடங்காத பெண். சுட்டித்தனமாக இருப்பேன். பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான சுயரூபம் தெரியும். பேராசிரியர்கள் முன்பு நல்ல பெண் மாதிரி இருப்பேன். அவர்கள் போனதும் வகுப்பில் அட்டகாசம் செய்வேன்.

சகமாணவிகளை கிண்டல், கேலி என கலாய்ப்பேன். ரவுடித்தனங்கள் செய்வேன். பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன். இதனால் நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் தலையில் விழும்.

ஆசிரியைகளிடம் திட்டு வாங்குவார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருப்பார்கள். நான் கெஞ்சி சமாதானம் செய்து விடுவேன். சினிமாவுக்கு அடிக்கடி போவேன். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கிறேன்.

கல்லூரி சுவர் ஏறி குதித்தும் படத்துக்கு போய் உள்ளேன். ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச்மேன் பிடித்து பிரின்ஸ்பாலிடம் நிறுத்தி விட்டார். அவர் அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அன்று முதல் அடாவடித்தனங்களை மூட்டை கட்டி விட்டு அமைதியான பெண்ணாக மாற ஆரம்பித்தேன் என்றார்.