அமெ­ரிக்க பிரே­ர­ணைக்கு த.தே.கூட்டமைப்பு வர­வேற்பு!!

537

tna_14இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தாபி­மானச் சட்ட மீறல்கள் குறித்து பொது­ந­ல­வாய மற்றும் வெளி நாட்டு நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய நம்­ப­க­ர­மான நீதிச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி திருத்­தப்­பட்ட அமெ­ரிக்­காவின் புதிய பிரே­ர­ணையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ளது.

இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித அலு­வ­லகம் வௌியிட்ட அறிக்­கையின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தி அமெ­ரிக்கா கடந்­த­வாரம் வௌியிட்ட நகல் பிரே­ரணை வரைபில் காணப்­பட்ட 26 பந்­திகள் 20 பந்­தி­க­ளாக குறைக்­கப்­பட்டு் திருத்­தங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட பிரே­ரணை ஜெனிவா நேரப்­படி நேற்று 5.15 மணி­ய­ளவில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து தமி்ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் குறித்து அமெ­ரிக்கா நேற்­றைய தினம் தனது பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

குறிப்­பாக அப்­பி­ரே­ர­ணையில் சர்­வ­தேச குற்­றங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக பொது­ந­ல­வாய மற்றும் வௌிநாட்டு நீதி­ப­திகள் , விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய நம்­ப­க­ர­மான நீதிச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இலங்­கையின் நீதித்­து­றைக்கு கிடைத்த வெற்­றி­யாகும். இந்­நீ­தி­மன்ற செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கும், சர்­வ­தே­சத்­த­ரப்­பி­ன­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது பூரண பங்­க­ளிப்பை வழங்­க­வுள்­ளது.

அதே­நேரம் அர­சாங்கம் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு என்ற வகையில் இவ்­வி­ட­யங்­களை கருத்­திற்­கொண்டு தனது ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி முழு அள­வி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

மேலும் இப்­பி­ரே­ர­ணையில் சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக நீதி மன்றம் உரு­வாக்­கப்­பட்டு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­த­னூ­டாக கடந்த காலத்தில் காணப்­படும் நிலை­மை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கா­ன­வொரு வியத்­தகு மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­ய­முள்­ளது.

இவ்­வ­ரை­பா­னது பல்­வேறு கடி­ன­மான நிலை­மை­களில் கருத்­தொற்­றுமை மிக்­க­தா­க­வுள்­ளது. பாதிக்­கப்­பட்ட தரப்பின் பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டை­யிலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பிற்­கான பொறுப்­புக்­கூறும் தரப்­பினர் என்ற அடிப்­ப­டை­யிலும் அவர்கள் திருப்­தி­கொள்ளும் வகையில் சொற்­றொ­டர்கள் அமை­ய­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம். ஆகவே இ்ந்த வரைபில் கூறப்­பட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் ஊடாக நல்­லி­ணக்­கத்­திற்­கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல்கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.