சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முனைவது மஹிந்த ராஜபக்ஷவை காப்பற்றும் நோக்கத்தில் அல்ல- அமைச்சர் சம்பிக்க!!

513

2015_Jun_11_4சர்­வ­தேச விசா­ர­ணை­களில் இருந்து தப்­ப­வேண்டும் என நினைப்­பது மஹிந்த ராஜபக் ஷவை காப்­பாற்றும் நோக்­கத்தில் அல்ல. எமது இரா­ணு­வத்­தையும் நாட்­டையும் காப்­பாற்­றவே உள்­ளக பொறி­மு­றை­களை கோரு­கின்றோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஆட்சி மாற்­றமே நாட்டை காப்­பாற்­றி­யுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நல்­லி­ணக்­கத்­துக்­கான தேசிய முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்தின் போது போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதில் உண்மைத் தன்­மை­களை கண்­ட­றிய வேண்டும். ஆனால் அந்த நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட்டை மீண்டும் பழைய ஆயுதக் கலா­சா­ரத்துக் கொண்டு செல்­வதை நாம் அனு­ம­திக்க மாட்டோம். யுத்தம் முடி­வ­டைந்து நாட்டில் அமை­தி­யான சூழ­லொன்று உரு­வா­கி­னாலும் நாட்டில் மூவின மக்­களின் மனங்­க­ளையும் வென்­றெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது.

அதேபோல் சர்­வ­தே­சத்­தை யும் தக்­க­வைக்க முடி­யாமல் போய்­விட்­டது. இதற்க்கு எமது உள்­ளக செயற்­பா­டு­களும் எமது வெளி­நாட்டுக் கொள்­கை­யுமே கார­ண­மாகும். சர்­வ­தேச சவால்­களை சமா­ளிக்க அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட நபர்­களும் எமது வெளி­நாட்டுக் கொள்­கையும் முழு­மை­யாக பக்­கச்­சார்­பான, நாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளா­கவே அமைந்­தது. வெளி­வி­வ­கார அமைச்சர் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் அடி­மை­யாக செயற்­பட்டார்.

அதேபோல் எமது நாட்டை சீர­ழிக்கும் வகை­யி­லேயே மஹிந்­தவின் வெளி­நாட்டுக் கொள்­கையும் அமைந்­தது. கடந்த அர­சாங்­கத்­திலும் நாம் அங்கம் வகித்­தி­ருந்தோம் அதேபோல் இந்த அர­சாங்­கத்­திலும் நாம் அங்­கத்­த­வ­ராக செயற்­ப­டு­கின்றோம். ஆகவே இரண்டு அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் எம்மால் நன்­றாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் செய்­ய­மு­டி­யாத அனைத்தும் இந்த அர­சாங்­கத்தின் மூலம் செய்து காட்­டி­யுள்ளோம். மூவின மக்­களின் மனங்­க­ளையும் வென்­றெ­டுத்து ஜன­நா­யக ரீதி­யி­லான ஆட்­சியை அமைத்­துள்ளோம். அதேபோல் சர்­வ­தேச உற­வையும் பல­ப­டுத்­தி­யுள்ளோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சரி­யான தீர்­மா­னங்கள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் முன்­னெ­டுக்கும் ராஜ­தந்­திர நகர்­வுகள் என்­பன நாட்டை சரி­யான பாதையில் வழி­ந­டத்­து­கின்­றது.

இன்றும் மஹிந்­தவின் கொள்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் நாட்டின் நிலைமை மாறி­யி­ருக்கும். மஹிந்த இன்றும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் கடி­ன­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும். மஹிந்­த சர்­வ­தேச நீதி­மன்றின் தலை­யீட்­டுடன் கைது செய்­யப்­பட்­டி­ருப்பார். அதேபோல் இரா­ணு­வமும் குற்­ற­வா­ளிகள் என ஒரு தீர்­மானம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும்.

அவ்­வா­றான சூழ்­நி­லையில் இருந்து நிலை­மைகள் மாறி­யுள்­ளது. அதேபோல் சர்­வ­தேச விசா­ர­ணைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் நாம் உள்ளக பொறிமுறையை கோருவது மஹிந்த ராஜபக் ஷவை காப் பாற்றும் நோக்கத்திலோ அல்லது அவரது செயற்பாடுகளை மூடி மறைக்கும் நோக் கத்திலோ அல்ல. எமது நாட்டையும் எமது இராணுவத்தையும் காப்பாற்றவே இந்த விசாரணை செயற்பாடுகளை எதிர்க்கின் றோம் எனக் குறிப்பிட்டார்.