புவியும், சந்திரனும் சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கவுள்ளன!!

319

1443094799_664197_hirunews_moonearthஎதிர்வரும் 28ஆம் திகதி புவியும் சந்திரனும் தமது சுற்றுப்பாதையில் நெருக்கமாக பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கடலில் கொந்தளிப்பு சில சமயங்களில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியை சுற்றி நிலவு பயணிக்கும் சுற்றுப்பாதையில் நெருக்கி வரும் எனவும். எதிர்வரும் 28 ஆம் திகதி புவிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை சுற்றுலாப் பயணிகள் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ப்ரிஷாந்த இந்த தகவலை வெளியிட்டார்.