நியூஸிலாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் சலவைத் தூளை உண்ணும் தனது விநோத பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போராடி வருகிறார்.
வங்கானுயி பிராந்தியத்தைச் சேர்ந்த மிசேலா மார்ட்டின் (23 வயது) என்ற மேற்படி பெண், தனது இரண்டாவது குழந்தையை கருத்தரித்தது முதற் கொண்டு சலவைத் தூளை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
ஆரம்பத்தில் சலவைத் தூளின் மணத்தை நுகர்வதில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து சலவைத் தூளை சிறிது சிறிதாக உண்ண ஆரம்பித்து அந்தப் பழக்கத்திற்கு தீவிர அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.