வவுனியாவில் நாளை சிறுமி சேயாவின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்!!

518

12033467_408485806011407_2028240160_n

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து நாளை (26.09.2015) வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ் ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.