சிரிய கிராமமொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு முன்னரான இறுதித் தருணத்தில் கதறி அழுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாம் புஹாரி ஜமாத் போராளி குழுவைச் சேர்ந்த உஸ்பெகிஸ்தான் பிரஜையான ஜபார் அல்–ரேயர் என்ற மேற்படி இளைஞர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை குறிப்பிட்ட கிராமத்துக்குள் செலுத்திச் செல்கையில் அச்சம் காரணமாக கதறி அழுகிறார்.
தொடர்ந்து அவர் குண்டை வெடிக்க வைக்கவும் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது.மேற்படி புகைப்படங்களானது அல்– கொய்தாவுடன் தொடர்புடைய அல்– நுஸ்ரா போராளி குழுவைச் சேர்ந்தவர்களால் ஆளற்ற விமானத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்டுள்ளது.