தாய்லாந்தை திங்கட்கிழமை மாலை துஜுவான் சூறாவளி தாக்கியுள்ளது.இந்த சூறாவளியையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7,000 க்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்படி சூறாவளியால் அந்நாட்டின் வட பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சூறாவளியில் சிக்கி எவரும் காயமடைந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.