வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் வன்முறைகளை தடுப்போம், ” பிள்ளைகளை உயிர் போல காப்போம் ” என்ற தொனிப்பொருளில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இன்று(30.09.2015) செட்டிகுளத்தில் நடைபெற்றது.
இப் பேரணியில் இளைஞர் சேவைகள் மன்றமும், சிறிலங்கா இளைஞர் கழக சம்மேளன ஏட்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள், வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய மாணவ மாணவிகளும் மற்றும் செட்டிகுள பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது செட்டிகுள பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து பிரதேச சபை வரை சென்று பின் அங்கிருந்து திரும்பி பிரதேசம் செயலகம் வரை சென்று நிறைவுற்றது.