படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட 346 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்பு!!

392

lybiaலிபிய திரி­போலி நகரின் கிழக்கு கடற்­க­ரை­யி­லி­ருந்த சுமார் 10 கடல் மைல் தொலைவில் 3 பட­கு­களில் பய­ணித்த 346 குடி­யேற்­ற­வா­சி­களை தாம் மீட்­டுள்­ள­தாக லிபிய கரை­யோர காவல் படை­யினர் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தனர்.

மீட்­கப்பட்ட இந்த குடி­யேற்­ற­வா­சி­களில் சுமார் 100 பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். மேற்­படி குடி­யேற்­ற­வா­சிகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலைக் கடந்து ஐரோப்­பா­விற்கு பய­ணத்தை மேற்­கொள்ள முயற்­சித்த வேளை­யி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

அள­வுக்­க­தி­க­மான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற இரு பட­கு­க­ளி­லி­ருந்து 34 பெண்­கள், 4 சிறு­வர்­கள் உட்­பட 230 குடி­யேற்­ற­வா­சிகள் முதலில் மீட்­கப்­பட்­டுள்­ளனர். தொடர்ந்து மூன்­றா­வது பட­கொன்­றி­லி­ருந்து 54 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 116 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.