லிபிய திரிபோலி நகரின் கிழக்கு கடற்கரையிலிருந்த சுமார் 10 கடல் மைல் தொலைவில் 3 படகுகளில் பயணித்த 346 குடியேற்றவாசிகளை தாம் மீட்டுள்ளதாக லிபிய கரையோர காவல் படையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இந்த குடியேற்றவாசிகளில் சுமார் 100 பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். மேற்படி குடியேற்றவாசிகள் மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு பயணத்தை மேற்கொள்ள முயற்சித்த வேளையிலேயே மீட்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கதிகமான குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகளிலிருந்து 34 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 230 குடியேற்றவாசிகள் முதலில் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது படகொன்றிலிருந்து 54 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 116 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.