முல்லைத்தீவு மல்லாவி ஒட்டறுத்த குளப்பகுதியில் நேற்று(30.09.2015) இரவு இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து மல்லாவி நோக்கி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பேரூந்தும், மல்லாவியில் இருந்து நட்டான்கண்டல் நோக்கி சென்ற பேரூந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பயணித்த சுமார் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்துகளே இவ்வாறு மோதியுள்ளதாகவும் காயமடைந்தவர்களை நோயாளர் காவு வண்டியினூடாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதடன் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






