நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

276

Rain

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.