ரயில் பெட்டியின் அடியில் சிக்கி கொண்ட பெண் அதிஷ்டவசமாக உயிருடன் மீட்பு!!

387

ஜப்பானில் ரயில் பெட்டியில் இருந்து இறங்கும் போது ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்தும் இடையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே விரைந்து வந்த ரயில் நிலைய அதிகாரிகள் சக பயணிகளின் உதவியுடன் குறித்த பெண்ணை உயிருடன் மீட்டனர். 32 டன் எடையுள்ள ரயில் பெட்டியை 40 பயணிகளும், சக ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து சாய்த்து குறித்த பெண்ணை ரயில் அடியில் இருந்து பிளாட்பாரத்துக்கு இழுத்தனர்.

கடுமையான போராட்டத்திற்கு பின் பெண் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டார்.இதனால் 8 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

r1 r2