வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறுகைத்தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளிற்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்..
இன்று (02.10.2015) வவுனியா கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமிய அபிவிருத்தி திணைக்கள அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






