
இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது.
குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக இணைந்து கொண்டனர். மேலும் அமெரிக்க தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து ஒத்துழைப்பதாகவும் இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக்கும் இலங்கை அரசு உறுதியளிப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநி ரவிநாத் ஆரியசிங்க இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை குறித்த தலைப்பில் சமர்பிக்கப்பட்ட நான்காவது தீர்மானம் இதுவெனவும் இந்தத் தீர்மானத்திற்கே இலங்கை இணை பங்காளராக இணைந்துள்ளதாகவும் இங்கு உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதுவே இலங்கை மற்றும் இந்த ஆணைக்குழுவின் உண்மையான வரலாற்று வளர்ச்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய இந்தியப் பிரிதிநிதி, இலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வலியுறுத்துறோம். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்தியா ஆதரவளிக்கும், என்றார்.





