யாழில் மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது ஜெயந்திதினம் அனுஸ்டிப்பு !(படங்கள்)

734

மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது ஜெயந்தி தினத்தை அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது.

நேற்று (02.010.2015) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியிலுள்ள அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் .இராசநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலி நினைவுரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தாதியக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படங்கள் :நிருஜன்

12037959_1429086960452229_3328625126258970495_n 12063314_1429086997118892_5725867391562934704_n 12088095_1429086927118899_7322550496378195266_n 12105748_1429086923785566_5933874570950289853_n 12118901_1429087047118887_1653469766991572887_n