வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கபட்டவர்களை கைது செய்ய கிராமசேவகர்களின் உதவியை கோரும் பொலிசார் !!

517

vavuniya2

வவு­னி­யாவில் 936 பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட கைதிகள் உள்­ள­னர். அவர்­களை கைது செய்ய பிர­தேச செய­லகம் உதவி செய்ய வேண்டும் என வவு­னியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சண்­.அ­பே­ய­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

வவு­னியா பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற சிவில் பாது­காப்புக் குழுக் கூட்­டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்

நான் வவு­னி­யாவில் கடந்த 3 வரு­ட­மாக பணி­யாற்­று­கின்றேன். 1000க்கும் மேற்­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்­துள்ளேன். ஆனால் குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தற்கு கிராம சேவை அலு­வ­லர்­களின் உதவி எனக்கு கிடைக்­க­வில்லை. இந்தக் குற்­ற­வா­ளிகள் ஒவ்­வொரு கிராம வேவை அலு­வ­லரின் பிரி­வு­க­ளிலும் தான் வசித்­துள்­ளார்கள். குற்­ற­வா­ளி­களை இனங்­காட்ட கிராம அலு­வ­லர்கள் உத­வ­வேண்டும். தற்­போது வவு­னி­யாவில் நீதி­மன்­றத்தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 936 குற்­ற­வா­ளிகள் இருப்­ப­தாக எம்­மிடம் தக­வல்கள் உள்­ளன. இதில் எத்­தனை பேர் தற்­போது வவு­னி­யாவில் உள்­ளனர்? வெளிநாடு சென்றோர் எத்­தனை பேர்? இறந்­த­வர்கள் எத்­தனை பேர் எனத் தெரி­யாது.

இவர்­களின் விப­ரங்­களை நான் பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கின்றேன். அவர்கள் தொடர்­பான தகவல் கிடைத்தால் உட­ன­டி­யாக பிர­தேச செய­லாளர் ஊடாக தமக்கு தெரி­யப்­ப­டுத்­து­மாறும் கோருகின்றேன் எனவும் கூறினார்.

இதே­வேளை குற்­ற­வா­ளி­களின் பெயர் விபரப் பட்டியலை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் அதன் விபரங்களை கிராம அலுவலர்களிடம் இருந்து பெற்று பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தார்.