தாய்லாந்திலுள்ள கிராமப் பகுதிகளில் குரங்குகள் கொடூரமான முறையில் தினசரி தென்னந்தோப்புகளில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுவது தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி குரங்குகள் குட்டிகளாக கடத்தப்பட்டு ஒன்றுடனொன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விசேட பயிற்சிப் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அவற்றுக்கு அங்கு தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களைப் பறிக்க பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் அந்தக் குரங்குகள் தென்னந் தோப்புகளுக்கு அனுப்பப்பட்டு ஓய்வின்றி பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மேற்படி குரங்குகள் தினசரி 1,000 தேங்காய்கள் வரை பறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.