இலங்கையில் இன்று ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (06.10.2015) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.






