தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம்!!

415

1 (4)இலங்கை அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றை காணும் நோக்கில் உத்­தி­யோ­க­ பற்­றற்ற பேச்­சு­வார்த்­தை­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும், ஏனைய தமிழ் கட்­சி­க­ளு­டனும் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்தின் அர­சியல் நோக்­க­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்தல், மனித உரிமை மற்றும் ஜன­நா­யக நிறு­வ­னங்­களைப் பலப்­ப­டுத்தல் என்­பன இருந்­தாலும் அவற்றில் மிக முக்­கி­ய­மா­னது அர­சியல் தீர்வைக் காண்­ப­தாகும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பாக நீண்­ட­கா­ல­மாக தீர்க்­கப்­ப­டாமல் இருக்கும் பிரச்­சி­னை­க­ளான அர­சியல் தீர்வு, தேசிய ஒற்­றுமை, மற்றும் மதப் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதே அர­சாங்­கத்தின் முதன்மை நோக்­க­மாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார்.

மொழி, மற்றும் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரங்கள் கடந்த ஐந்து தசாப்­த­கா­ல­மாக நாட்டை ஆக்­கி­ர­மித்­துள்ள நிலையில் மதப் பிரச்­சினை கடந்த தசாப்­தத்தில் உரு­வா­கி­யி­ருந்­தது.

இவற்றை பல­மான இலங்கை என்ற அடை­யா­ளத்­துடன் தீர்க்­க­வேண்­டி­யது அவ­சி­யாகும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார் என்று ‘இந்துப் பத்­தி­ரிகை’ தெரிவித்துள்ளது. இதே கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.