கொழும்பில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
இதற்கான பரீட்சாத்தம் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.