ஆசியாவிலேயே மோசமாக களத்தடுப்பில் ஈடுபடும் அணி இலங்கைதான் என்று நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் அந்தஸ்துபெற்ற ஆசிய அணிகளை விட இலங்கை அணி பின்தங்கியுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன் என்று இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்ன தெரிவித்தார்.
இலங்கை அணிதான் ஆசிய அணிகளிலேயே மிகவும் மோசமாக களத்தடுப்பில் ஈடுபடுகிறது என்று தெரிவித்திருந்தார். இது பெறிதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஜெரோமிடம் இது குறித்து கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.