உடல் பருமனுக்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த வேளை மருத்துவர்களுக்கு தெரியாமல் பீஸா உணவை வரவழைத்தமைக்காக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட 800 இறாத்தல் நிறையுடைய நபர், தனது தந்தையின் வாகனத்தில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளான சம்பவம் அமெரிக்க ரொட் தீவில் இடம்பெற்றுள்ளது.
ரொட் தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடந்த சில மாதங்களில் ஸ்டீவன் அஸன்தி (33 வயது) என்ற மேற்படி நபரின் நிறை சுமார் 20 இறாத்தலால் குறைந்திருந்தது.
எனினும் அவர் உடல் பருமன் சிகிச்சை குறித்து தனக்கு விதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை விதிகளை மீறி பீஸா உணவை வரவழைத்து உண்டதால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றால் அவர் மேலும் அதிகளவான உணவை உண்டு தனது உயிருக்கு அபாயத்தைத் தேடிக் கொள்வார் என அஞ்சிய ஸ்டீவன் அஸன்தியின் தந்தை ஸ்டீவன் வியலட் அவரை தனது வாகனத் தில் தங்க வைத்துள்ளார்.