சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்ட பிக்குவிற்கு விளக்கமறியல்!!

465

sri-lanka-monk-arrestedபுத்த பிக்கு ஒருவர் பதி­னொரு வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டமை தொடர்­பான வழக்கில் சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

தெகி­யத்த கண்­டிய நீதிவான் நீதி­மன்­றத்தில் மேற்­படி வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது நீதி­பதி ஜி.எம்.பிரி­ய­தர்­ஷினி சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

தெகி­யத்த கண்­டிய பகு­தியில் மொர­தெ­னிய விஹா­ரையின் புத்த பிக்கு ஒருவர் விஹா­ரையின் அரு­கே­யுள்ள வீடொன்­றிற்குள் புகுந்து தனி­மையில் இருந்த 11 வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மாரி பொழிந்­துள்ளார். இதனை அச் சிறுமி பெற்­றோ­ரிடம் கூறி­ய­தை­ய­டுத்து பெற்றோர் தெகி­யத்த கண்­டிய பொலிஸ் நிலை­யத்தில் புகார் செய்­தனர். இப் புகாரின் பேரில் பொலிஸார் சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.