எருமை மாடொன்று முதலைக்கும் எருமைக்கும் இடைப்பட்ட தோற்றமுடைய விநோத தோற்றமுடைய கன்றுக்குட்டியை ஈன்ற சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
வாங்ஹின் பிராந்தியத்திலுள்ள ஹைரொக் எனும் இடத்தில் பிறந்த இந்தக் கன்றால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கன்று பிறந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
முதலையைப் போன்ற முகத்தையும் தோலையும் கொண்ட இந்தக் கன்று, எருமையை ஒத்த உடலையும் கால்களையும் கொண்டுள்ளது. இந்தக் கன்றை ஈன்ற எருமை மாடு இதற்கு முன் ஆரோக்கிய நிலையில் கன்றுக் குட்டிகளை ஈன்றிருந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கன்றுக்குட்டியின் பிறப்பானது தமது கிராமத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என கிராமவாசிகள் நம்புகின்றனர்.