பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??

862

Jffna_Trader-450x330

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­யாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது.

பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்­களின் விலை­களே அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் சமையல் எரி­வாயு, இறக்­கு­மதி செய்­யப்படும் விவ­சாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாத­னங்­களின் விலையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது.

இலங்கை ரூபாவின் பெறு­மா­னத்தை நிலை­யாகப் பேணத் தவ­றி­ய­மையே குறித்த விலை அதி­க­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தி­ருப்­ப­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.



எனவே, உலக வர்த்­தக சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலையில் வீழ்ச் சி ஏற்­பட்­டுள்­ள­போ­திலும் இலங்கை ரூபாவின் நிலை­யான பெறு­மா­னத் தைப் பேணத் தவ­றி­யதன் கார­ண­மாக அந்த விலை வீழ்ச்­சியை நுகர்வோர் அனு­ப­விக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் அமைக்கப்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் நூறு நாள் வேலைத்­திட்­டத்­திற்­கி­ணங்க சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால வரவு – செல­வுத்­திட்­டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் சில­வற் றின் விலை குறைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் அதன் பின்னர் குறித்த சில உணவுப் பொருட்­களின் விலை யில் அதி­க­ரிப்பு ஏற்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யி­லேயே எதிர்­வரும் சில தினங்­களில் விலை அதி­க ­ரிக்­கப்­ப­ட ­வுள்­ள­தாகத்தெரிய வரு­கி­றது. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்க ளின் விலை அண்மையில் அதிகரிக் கப்பட்டபோதிலும் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் தெரிய வருகிறது.