வெலிகடை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறைச்சாலைகள் ஆணையாளர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதானவர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.