9 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

389

thuukku1

ஹொரணை – அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் பாட­சாலை மாணவர் ஒருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.நேற்று காலை தனது வீட்­டுக்கு அருகில் உள்ள மர­மொன்றில் அவர் தூக்­கிட்டுக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

சம்­ப­வத்தில் 9 வய­தான சிறுவன் ஒரு­வரே பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
எவ்­வா­றா­யினும் குறித்த மாண­வனின் மரணம் குறித்து சந்­தேகம் நில­வு­வ­தா­கவும் அதனால் சடலம் பிரேதப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக பாணந்­துறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

சம்­பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.