அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் அவரது மகன் கமலசீலன் அனுசரணையில் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் மூத்தோர் சங்க வளாகத்தில் சர்வதேச மூத்தோர் தினம் நேற்று முன்தினம் 11.10.2015 ஞாயிறு அன்று வெகு விமர்சையாக நடை பெற்றது .
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன அவர்களும் ,கௌரவ விருந்தினர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்னி அமைப்பாளர் கோவிந்தராஜ் ,பாடசாலை அதிபர் எஸ்.தர்மகுலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர் .
120 மூத்தோர்களுடன் இயங்கும் மாணிக்கம் பண்ணை மூத்தோர் சங்கம் 3 வருடங்களாக தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வருடம் ஸ்கொட்லாந்தில் வசிக்கும் கமலசீலன் அனுசரணையில் அவரது தந்தையார் அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக இந்த நிகழ்வு தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )அவர்களால் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றது.
மூத்தோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், பணிஸ் உண்ணுதல், தேசிக்காய் கொண்டு செல்லல், தேங்காய் திருவல், சோடியாக ஊசி நூல் கோர்த்தல், சங்கீதக் கதிரை என்பன இடம் பெற்று பரிசில்கள் வழங்கி வைக்க பட்டன .
வயத்தில் மூத்த தேவநேசன் ஐயா அவர்கள் கௌரவிக்க பட்டதுடன், கணவனை இழந்து தேனீர் கடை வைத்து சீவியத்தை நடத்தும் திருமதி மேரி அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.