வடமாகாண மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்கள் ஓய்வு நிலை அதிபர் திரு எஸ்.விசுவலிங்கம்அவர்கள் சகிதம் சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளியில் 12.10.2015 அன்று மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
மேலும் முன்பள்ளியில் நிலவும் குறைகளை பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டார். முதியவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் உரிய நடவடிக்கைகளை 2016 நிதியாண்டின் போது எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.