வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரிவில் நேரியகுளம் வீரபுரம் பகுதியில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்க்கொள்வதற்காக பால்மாடுகளை வழங்கிவைத்தார்.
இன்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா மற்றும் செட்டிகுளம் பகுதி கால்நடைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.