தம்புள்ளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏழு இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
முகத்தை மூடியபடி வந்த ஒருவர் வங்கியில் இருந்த பெண்ணிடம் கைக் குண்டைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.