சகல அரசியல் கைதிகளையும் மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்!!

572

Mavai-senathirajah-01தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் அர­சியல் கைதிகள் என்ற வகையில் சிறை­களில் யாரு­மில்லை. எல்­லோ­ருமே குற்­ற­வா­ளிகள் தான் என்று கூறு­வதை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். சகல அர­சியல் கைதி­க­ளுக்கும் ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்கி அவர்­களை விடு­விக்­க­வேண்டும் என்று யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய மாவை­ சே­னா­தி­ராசா தெரிவித்தார்.

14 சிறை­களில் 217 கைதி­கள் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் நேற்­றுமுன்தினம் முதல் ஈடுபட்டுள்ளமை குறித்தும் இலங்­கையில் அர­சியல் கைதிகள் என்று எவ­ரு­மில்­லை­ என்ற நீதி­ய­மைச்சர் விஜே­தா­ஸவின் கருத்து தொடர்பாகவும் கேட்டபோதே மாவை சேனா­தி­ராசா எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

நீதி­ய­மைச்சர் விஜே­தா­ஸவின் கருத்து பொறுப்­பற்ற தன்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. சிறை­யி­லி­ருக்கும் அனைத்து கைதி­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற பழை­மை­யான கருத்தை நீதி­ய­மைச்சர் கொண்­டி­ருக்­கிறார். இது உண்­மைக்கு புறம்­பான நியா­ய­மாகும்.



நீதி­ய­மைச்­சரின் கூற்­றுப்­படி பார்த்­தாலும் விடு­தலைப் புலி­க­ளோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று கரு­தி­னாலும் அது அர­சியல் என்றே கரு­தப்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லி­களை அழைத்து அர­சாங்­கமே பல்­வேறு சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளது. சர்­வ­தே­சமும் இதனை நடத்­தி­யுள்­ளது.

அப்­ப­டி­யி­ருக்கும் போது ஒரு குறிப்­பிட்ட தொகுதி இளை­ஞர்­களை குற்­ற­வா­ளிகள் என்று கூறு­வது பொருத்­த­மற்ற விட­ய­மாகும்.

அக்­கா­லத்தில் பொலி­ஸா­ருக்கும் இரா­ணு­வத்­துக்கும் இருந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி வேண்­டு­மென்றே இந்த இளை­ஞர்கள் நீண்­ட­கா­ல­மாக சிறையில் அடைத்து வைத்­தி­ருப்­பது மிகவும் கொடூ­ர­மா­னது. ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னும் இது நீடிப்­பது அநீ­தி­யா­னது. ஜனா­தி­பதியும், பிர­தமரும் சிறை­யில்­வாடும் இளை­ஞர்கள் விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க வேண்டும்.

ஜனா­தி­பதி ஒரு­வரால் மட்­டுமே அந்த பொது மன்­னிப்பு வழங்க முடியும். ஏலவே ஆயுதம் தாங்கிப் போரா­டிய ஜே.வி.பி.யின­ருக்கு ஆயிரம் ஆயி­ர­மாக பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆன­ப­டியால் ஜனா­தி­பதி ஆட்­சி­பீடம் ஏறி­யது தமிழ், முஸ்லிம் மலை­யக மக்­களின் வாக்­குப்­ப­லத்­தினால் என்­பதை நினைவில் கொண்டு அதிலும் வட, கிழக்கு மக்கள் குறித்த ஆட்­சி­மாற்­றத்­துக்கு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பு செய்­துள்­ளார்கள் என்ற நன்­றி­யு­ணர்வை மனதில் கொண்டு சிறையில் வாடும் அனைத்து அர­சியல் கைதி­க­ளுக்கும் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்ய வேண்­டு­மெ­னக்­கேட்டுக் கொள்­கிறோம்.

கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக பெண்கள் உட்­பட சிறையில் அர­சியல் கைதி­க­ளாக வழக்­கு­ வி­சா­ர­ணைகள் இல்­லாமல் உயர்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டும் குற்­ற­வா­ளி­க­ளாக நிறுத்­தப்­பட்­ட­வர்­க­ளு­மாக 243 கைதிகள் 14 சிறை­களில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களை நாம் பல முறை சந்­தித்து உரை­யா­டி­யுள்ளோம். அவர்­க­ளது விப­ரங்கள் எமக்குத் தரப்­பட்டு முன்­னைய அர­சாங்­கத்­து­டனும் குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­டனும் மற்றும் சட்ட மா அதிபர் காரி­யா­ல­யத்­து­டனும் பேசி­யுள்ளோம்.

சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சார் பில் வழக்­க­றி­ஞர்கள் சிறைச்­சா­லை­க­ளுக்கு சென்று கைதி­களை விசா­ரணை செய்து மதிப்­பீட்­ட­றிக்­கை­யொன்று அர­சாங்­கத்­திடம் கைய­ளித்­த­தையும் நாம் அறிவோம். இது­வி­ட­ய­மாக சிறைக்­கை­திகள் எத்­த­னையோ முறை பல்­வேறு போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளார்கள். தற்­பொ­ழுது அந்த சிறை­க் கை­திகள் தமது உயிரை பண யம் வைத்து போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளார்கள். அவர்­களின் இந்தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது பல­மான ஆத­ரவை வழங்­கு­கி­றது.

ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்­னுள்ள இந்த அர­சாங்கம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரதமராகப் பத­வி­யேற்­ற­தற்குப் பின்னும் நாங்கள் தலைவர் சம்­பந்தன் தலை­மையில் சென்று சிறை­யி­லுள்ள கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். பொது­மன்­னிப்பு வழங்க வேண்டும் 20 வரு­டங்கள் கழிந்த நிலையில் அவர்­களை சிறையில் வைத்­தி­ருப்­ப­தற்கு எவ்­வ­கை­யான நியா­யமும் இல்லை.

நீதி­மன்றம் இனி குற்­ற­வா­ளி­க­ளாக கண்­டாலும் அவர்கள் 20 வரு­டத்­துக்கு மேல் சிறை­வாசம் அனு­ப­வித்து விட்­டார்கள். ஆகையால் அவர்கள் விடு­விக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக சொல்லப் போனால் வழக்­குகள் பதிவு செய்யப்படாமலே 20 வருடங்களுக்கு மேல் தமது வாழ்வை சிறையில் கழித்து விட்டார்கள். எக்குற்றமும் பதிவு செய்யப்படாமல் குற்றமற்றவர்கள் கூட விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். இப்படியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாடு வது அநீதியாகும். மரணதண்டனை விதிக் கப்பட்டவர்கள் கூட 20 வருடம் கழிந்த பின் விடுவிக்கப்படுகிறார்கள்.

எனவே, தீர்ப்பை வழங்கி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மாவை குறிப்பிட்டார்.