வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களினால் வவுனியா மாவட்ட இந்து ஆலயங்கள் சிலவற்றுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டிற்கான தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ஆலயங்களுக்கென மூன்று இலட்சத்து 50,000 ரூபாய் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிதியில் இருந்து மறவன்குளம் அருள்மிகு மகாலட்சுமி ஆலயம், செக்கடிப்புலவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், பொன்னாவரசங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கான நிதிக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்ட இந் நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.