இன்று சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பில் பார்வையற்றோர் ஊர்வலம்!!

881

school_6சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் துளசி மண்டபத்தில் நிறைவடைந்தது.

தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா தலைமையில் வெள்ளைப்பிரம்பை தாங்கிய பெரும் எண்ணிக்கையிலான விழிப்புலனற்றோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு செயலமர்வு கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.