இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று பாராட்டப்பட்ட அப்துல் கலாமின் 84வது பிறந்த தினம் இன்று (15ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது .
இந்த நிலையிலேயே ஏவுகணை வளாகத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.