சர்வதேச கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டத்திலிருந்து சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்குடன் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரித்து கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயன்முறை விளக்கங்களுடன் சுகாதார விளக்கங்களையும் வழங்கி பாடசாலை மட்டத்தில் சுகாதார விழிப்புனர்வை ஏற்படுத்தயதுடன் மாணவர்களுக்கு சுகாதாரப் போட்டிகள் நடாத்தி பரிசில்களும் வழங்கிவைத்தனர்.