போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையானது அனைத்து உலக நாடுகளிலும் உள்ள பிரச்சனை!!

408

z_p04-National-02போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்­பன சகல நாடு­க­ளிலும் காணப்­படும் பொதுப் பிரச்­சி­னை­யாகும். சக­லரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே அவற்றை ஒழிக்க முடியும் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

இந்து சமுத்­திர வல­யத்தில் போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் அதி­கா­ரிகள் பங்­கு­கொள்ளும் மூன்று நாள் உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்­பது சகல நாடு­க­ளிலும் காணப்­படும் பொதுப் பிரச்­சி­னை­யாகும். அந்­த­வ­கையில் எமது நாட்டில் குறிப்­பிட்ட இந்த பிரச்­சி­னை­யா­னது பரந்­த­ளவில் காணப்­ப­டு­கின்­றது.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து கடல் வழியைப் பயன்­ப­டுத்திக் கொள்கலன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்திச் செல்லும் வீதம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதை ஐக்­கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.



எனவே, இது போன்ற மிகப் பெரிய சவாலை முறி­ய­டிக்க அனை­வரும் கூட்­டா­கவும் ஒன்­று­பட்டும் செயற்­பட முன்­வர வேண்டும். அத்­துடன் நாடு­க­ளுக்கு இடை­யி­லான தகவல் பரி­மாற்­றங்கள், கூட்டுப் பயிற்சி தகவல் பரி­மாறல் போன்­றன மிகவும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும்.

இலங்­கையை பொறுத்த மட்­டிலும் இது ஒரு பாரிய சவா­லாகும். இவற்றை முற்­றாக முறி­ய­டிக்க வேண்­டி­யது சட்டத்தை அமு­லாக்கம் செய்யும் அனைத்து தரப்­பி­னர்­க­ளி­னதும் கட­மை­யாகும்.எமது நாட்டில் போதைப்பொருள் பாவ­னையை முற்­றாக முறி­ய­டிக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்பித்து அவற்­றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வரு­கின்றார்.

அதே­போன்று இது தொடர்பில் ஆராய விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்­றையும் உரு­வாக்­கி­யுள்ளார். இளை­ஞர்கள், மத்­தியில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் நோக்கில் பிர­பல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை விசேட தூதுவராக நியமித்துள்ளார்.

எனவே போதைப்பொருள் இல்லாத நாடொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.