வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா எதிர்வரும் 23.10.2015 வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெறஉள்ளது.
வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுடன் சித்தியடைந்த மாணவர்களையும் இதற்காக இரவு பகல் பாராது உழைத்த ஆசிரியர்களும் பாராட்டப்படவுள்ளனர்.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.