அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள்?

390

Netti

தூங்கி எழுந்­த­வுடன் மிக ஆனந்­த­மாக கைவி­ரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்­பு­க­ளிலும் நெட்டி முறிப்­பது சில­ரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்­கக்­கூ­டிய வேலை­க­ளுக்கு இடையில் அடிக்­கடி நெட்டி முறிப்­பதைப் பார்த்­தி­ருப்போம். இது நல்­லதா கெட்டதா?

அமெ­ரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் அகா­ட­மியின் செய்தித் தொடர்­பா­ளரும் எலும்பியல் வல்­லு­ந­ரு­மான டாக்டர் லியோன் பென்சன் இது­பற்றி கூறு­கை­யில்…“­விரல் எலும்புகளின் மூட்­டு­க­ளுக்கு இடையில் சுற்றி வரும் ஒரு­வ­கை­யான திர­வமே உங்­களை நெட்டி எடுக்­கத்­தூண்­டு­கி­றது. டென்ஷன் அதி­க­மாக இருப்­ப­வர்­களும் நெட்டி முறிப்­பார்கள். மன அழுத்தம் உள்­ள­வர்­களும், மனநோய் சிகிச்­சையின் ஆரம்ப கட்­டத்தில் உள்­ள­வர்­களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

எப்­போதோ ஒன்­றி­ரண்டு முறை நெட்டி முறிப்­பதால் மிகப்­பெ­ரிய விளைவு எதுவும் ஏற்­ப­டாது என்றாலும் அடிக்­கடி தொடர்ந்து செய்­யக்­கூ­டாது. எந்தப் பழக்­க­முமே அள­வுக்கு அதி­க­மானால் ஆபத்­தில்தான் முடியும்.

இரண்டு எலும்பு மூட்­டு­களின் இடையில் உள்ள தசை­நார்­களே மூட்­டுகள் உராய்­வதைத் தடுக்கின்றன. தொடர்ந்து அவ்­வாறு செய்­யும்­போது இந்த தசை­நார்கள் கிழிந்­து­விடும் அபாயம் உள்ளது. விரல்­களை அள­வுக்கு அதி­க­மாக மடக்கும் போது தசை­நார்­களின் வேலையை முடக்கிவிடும். அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும்” என்கிறார்.